நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலைக்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக கடந்த ஜூன் மாதம் பதிவு செய்யப்படாத சப்ளையர் ஒருவர் சமர்ப்பித்த ஏலம் ஏற்கப்பட்டதாக கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2022 முதல் 2025 வரையிலான காலப் பகுதியில் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான கொள்முதல் செயல்முறை மதிப்பீடு தொடர்பான சிறப்பு தணிக்கை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத சப்ளையர் சமர்ப்பித்த நிலக்கரி விநியோகம் தொடர்பான ஏலம் தகுதியற்ற ஏலமாக கருதப்பட்டிருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி, இலங்கை நிலக்கரி நிறுவனம் இந்த பதிவு செய்யப்படாத நிலக்கரி வழங்குனருடன் வணிகம் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபரிடம் வினவியதுடன், சட்டமா அதிபரின் கருத்தைப் பெறுவதற்கு முன்பே ஏலம் வழங்கப்பட்டதாக கணக்காய்வு அறிக்கை கூறுகிறது.
பிற செய்திகள்