இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில்!

இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாகவும் அவர்கள் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியின் சட்டத்தரணிகளிடம் கேட்டுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அந்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற தகவலை வெளியிட போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எமது கட்சியில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இருக்கின்றனர். அது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், அவர்கள் யார் என்பதை வெளியிட முடியாது. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய செயற்படுவோம்.

இது சம்பந்தமாக எமது சட்டத்தரணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் ஒன்றை எடுப்போம் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *