
யாழ்ப்பாணம்- கைதடி கமநல சேவை நிலைய எல்லைக்குட்பட்ட நாவற்குழி கிழக்கு கமக்கார அமைப்பைச் சேர்ந்த நெற் செய்கையாளர்கள் இலவச சூழல் நேய உரங்களைப் பெற விண்ணப்பிக்குமாறு நாவற்குழி கிழக்கு கமக்கார அமைப்பு கோரியுள்ளது.
குறித்த விண்ணப்பப் படிவங்களை நெற்செய்கையாளர்கள் கமக்கார அமைப்பிடம் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கூறப்படுகின்றது.
விண்ணப்பித்தவர்களுக்கு சூழல்நேய உரங்களான சேதனப் பசளை மற்றும் திரவ உரங்கள் என்பன இலவசமாக வழங்கப்படவிருப்பதாகவும் நாவற்குழி கிழக்கு கமக்கார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த பதிவுகளை கைதடி கமநல சேவை நிலைய எல்லைக்குட்பட்ட ஏனைய கமக்கார அமைப்புகளும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்