தொழில் வாய்ப்பின்றி, அன்றாட உணவிற்கே பெரும் பாடுபடும் குடும்பங்கள்! – இலங்கையில் அவலம்

முல்லைத்தீவு துணுக்காய்ப் பிரதேசத்துக்குட்பட்ட தேராங்கண்டல் கிராமத்தில் தொழில் வாய்ப்பின்றியும் வருமானம் இன்றியும் பெருமளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அன்றாட உணவிற்கே பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பொருட்களின் விலையேற்றம் என்பன தொழில் வாய்ப்பற்ற குடும்பங்களையும் பெண்களை தலைமைத்துவங்களாகக் கொண்ட குடும்பங்களையும் பெரிதும் பாதித்துள்ளன.

குறிப்பாக அரிசி, சீனி, கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது இருப்பதாகவும் தெரிவித்துள்ள இப்பகுதி மக்கள், அன்றாடம் ஒரு நேர உணவை கூட உண்ணக்கூடிய நிலையில் தாங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வாழ்வாதாரத்துக்காக எந்த ஒரு பயிர் செய்கைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் எரிபொருட்களின் விலையேற்றம், காரணமாக பெரிதும் பாதித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *