சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள்! சபாநாயகர் தகவல்

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தனக்கு தெரிந்த வகையில் இரண்டு மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இவர்களைத் தவிர வேறு எவரும் இவ்வாறு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்களா என்பது தமக்குத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதனை தவிர வேறும் வழியில்லை என சபாநாயகர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *