யால பூங்காவில் வன விலங்குகளுக்கு பாதகமாக செயற்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை

யால பூங்காவில் வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட குழுவினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

யால பூங்காவில் வன விலங்குகளை துன்புறுத்தினர் என்ற அடிப்படையில் , எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, வனஜீவராசிகள் திணைக்களத்திடம் அந்த நபர்களைப் பற்றிய அனைத்து தகவல்களும், அவர்களின் அடையாள எண்கள், முகவரிகள் மற்றும் வாகன எண்கள் மற்றும் முறையற்ற நடத்தையை நிரூபிக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று அமைச்சகம் கூறுகிறது.

அதன்படி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் திரு.சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.

இவர்கள் எவரும் விசேட அனுமதியின் கீழ் யாலக்குச் செல்லவில்லை எனவும் சாதாரண சுற்றுலாப் பயணிகள் எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் குறித்த பகுதியில் விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் குறித்த நபர்கள் வாகன ரேஸ் களை மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *