சிறிலங்காவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ள ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் எதிர்வரும் சில வாரங்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியடெல் துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த P 627 கப்பல், 1393 கடல் மைல்கள் பயணித்து நேற்று முன்தினம் சிங்கப்பூர் செங் கீ துறைமுகத்தை சென்றடைந்தாகவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பல், சிங்கப்பூர் துறைமுகத்தை சென்றடைந்த நிலையில் அந்நாட்டின் சிறிலங்காவிற்கான உயர்ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்தன கப்பலின் கட்டளை அதிகாரியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
P 627 கப்பல் இதுவரை பசுபிக் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலில் சுமார் 50 நாட்கள், 9093 கடல் மைல்கள் பயணம் செய்துள்ள நிலையில் நவம்பர் மாதம் முற்பகுதியில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
குறித்த, கப்பலை அமெரிக்க அரசாங்கம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிறிலங்கா கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.
இருப்பினும், சிறிலங்கா கடற்படைக்கு அவசியமான வகையில் அதனை நவீன மயப்படுத்தப்பட்ட பின்னரே அந்தக் கப்பல் அங்கிருந்து சிறிலங்கா நோக்கி பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்