கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் பணப்பைகள், கைத்தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் என்பன திருடப்பட்டமையால் வைத்தியசாலையில் பாரிய பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையை சுற்றி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் வந்து நோயாளர்களின் உடமைகளை திருடுவதாகவும், சிலர் வைத்தியசாலையில் தாதியர் வேடமிட்டு வந்து திருடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாளாந்தம் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதால் வைத்தியசாலையில் தற்போதுள்ள பொலிஸ் நிலையத்திற்குப் பதிலாக பொலிஸ் பிரிவை அமைக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகள் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தும் அவர்கள் அதனைத் தவிர்த்து வருவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார். இப்போராட்டங்கள் நடந்து வருவதால், அதைத் தவிர்க்கிறார்கள்.
இதனையடுத்து, வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொது பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திருட்டுச் சம்பவங்களுக்கு வைத்தியசாலையின் சில இளநிலை ஊழியர்களும் துணைபோவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த சம்பவங்கள் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்தும் இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருட்டில் ஈடுபட்ட பலரை வைத்தியசாலை ஊழியர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
பிற செய்திகள்