முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
மேல்மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளின் பதிவு எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், புதிய அதிகரிக்கப்பட்ட கோட்டாவுக்கான QR குறியீட்டிற்கான எரிபொருள் விநியோகம் நவம்பர் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை ஏனைய மாகாணங்களிலும் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பிற செய்திகள்