யாழில் இளைஞனை மோதிவிட்டு தப்பித்துச் சென்ற பேருந்து மடக்கிப் பிடிப்பு!

யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை ஹென்றிஸ் பாடசாலை வீதியில் இளைஞன் ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற பேருந்து ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று மாலை 19 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை வீதியால் வந்த பேருந்து அவரை மோதித்தள்ளிவிட்டு தப்பித்துச் சென்றது.

இதன்போது விரைந்து செயற்பட்ட அப்பகுதி மக்கள் பேருந்துவையும் பேருந்தின் சாரதியையும் மடக்கிப் பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.எனினும் இளைஞனுக்கு சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *