
ஹட்டன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மதுபான விற்பனை பிரிவில் நேற்று 23 ஆம் திகதி மாத்திரம் 50 லட்ச ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த பல்பொருள் அங்காடியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதாவது ,23 ஆம் திகதி குறித்த பல்பொருள் அங்காடியில் நாளாந்த வர்த்தகம் 70 லட்ச ரூபாவென்றும், மதுபான விற்பனை பிரிவில் மாத்திரம் 50 லட்ச ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருட்கள் 20 லட்ச ரூபாவுக்கு மாத்திரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று 24 ஆம் திகதி நுவரெலிய மாவட்டத்தில் உள்ள சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. நுவரெலிய மாவட்டம் மற்றும் பதுளை மாவட்டத்தின் சில பிரதேச செயலக பிரிவுகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மதுபான சாலைகள் வழமை போல் திறக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்