முச்சக்கரவண்டிகளுக்கு முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 20 ரூபாயால் குறைக்க நடவடிக்கை

முச்சக்கரவண்டிகளுக்கு கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 20 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

QR முறையின் கீழ் தொழில்முறை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க தீர்மானித்ததன் மூலம் இந்த விலை குறைப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

தொழில்முறை முச்சக்கரவண்டி சங்கங்களுடன் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இதன்போதே தொழில்முறை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *