நாடளாவிய ரீதியில் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இன்று வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் எந்தப் பாகத்திலாவது தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அவசியமில்லை என கருதும் பட்சத்தில் வழமைபோன்று இன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *