யாழில் திடீரென கழமிரங்கிய விசேட படையினர் : வெளியான காரணம்!

யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பலாலி பாதுகாப்பு தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பெருமளவான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணப் பகுதிக்கு போதைப்பொருள் கடத்தல் மிகப் பெரிய அளவில் நடைபெறுவதுடன், இளம் தலைமுறையினர் அவற்றிற்கு அடிமையாகும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இந்த மோசமான நிலையை இல்லாதொழிப்பதை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தரவின் தலைமையில் விசேட அதிரடிப் படைப் பிரிவொன்று உருவாக்கப்பட்டு விசேட அதிரடிச் சோதனைகளும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் மூலம் யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், கைது செய்யவும், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று (23-10-2022) 51 ஆவது படையணியின் கீழ் ஜே-150 கிராமசேவகர் பிரிவின் மாதகல் கிழக்கில் 513 ஆவது படையணியின் 16 கெமுனு ஹேவா படையணியினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 100 கிலோ கஞ்சாவுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இவ்வாறான ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முகமாக யாழ். பொதுமக்கள் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குமாறும், இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பின்வரும் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *