நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், சில பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் சுமார் 15,000 குடும்பங்கள் வசிப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த அபாய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.
பிற செய்திகள்