தீபாவளி கொண்டாட்டத்தால் தமிழகம் முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள்

தீபாவளி கொண்டாட்டத்தால் தமிழகம் முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன எனவும், இதில் சென்னையில் மாத்திரம் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன எனவும் தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தீபாவளி கொண்டாட்டம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.  தமிழகத்தில் புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி,  பட்டாசுகள் வெடித்து மக்கள் தீபாவளியை கொண்டாடினர்.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது தீ விபத்து சம்பவங்களும் தமிழகம்  முழுவதும் பதிவாகியுள்ளன.

நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்திருக்கிறது.

இந்த 250 தீ விபத்து சம்பவங்களில் சென்னையில் மட்டும் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன எனவும் தீயணைப்பு துறை தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *