2ஆம் திகதி தெரியும் – அரசை எச்சரிக்கும் முன்னாள் எம்.பி ஹிணிக்கா

மக்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டு,தனது குடும்பத்தை வளர்க்கும் செயற்பாட்டை ரணில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கிறது என ,முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டையும் மக்களையும் அரசு அடக்கி ஆள்கிறது. மக்களை நடுத் தெருவில் தள்ளிவிட்டு அடக்க முனைக்கிறது. நாட்டை நாசம் செய்கிறது .கோட்ட குடும்பத்துக்கு சேவை செய்கிறது.இதுதான் ரணில் அரசின் சேவை.

நாட்டை மீட்டுடெடுத்த மக்களை நடு வீதியில் தள்ளி, மாணவத் தலைவர்களையும் மதத்
தலைவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.

இதை இப்படியே விடப் போவதில்லை. இதற்கு முற்று புள்ளி விரைவில் வைப்போம்.
மற்றுமொரு மக்கள் அலையயை நவம்பரில் இருந்து ஆரம்பிப்போம். இதற்கான முதல் கட்டம், கொழும்பில் எதிர்வரும் வரும் மாதம் 2 ஆம் திகதி தெரியும்.

நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. சிறையில் தள்ள முடியாது .இந்த அரசுக்கு சரியான பாடம் புகட்டுவோம். பயங்கரவாத தடை சட்டம் உடன் நீக்க வேண்டும். கைது செய்ய பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள், போராட்ட உறுப்பினர்கள்,தேரர் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *