இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு- 21பேர் காயம்!

<!–

இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு- 21பேர் காயம்! – Athavan News

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பல பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 21பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில், ஏராளமான இஸ்ரேலியப் படைகள் நாப்லஸ் நகரைத் தாக்கியதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையகமான ரமல்லா நகருக்கு அருகிலுள்ள நபி சலே கிராமத்தில் இஸ்ரேலியப் படைகளுடனான மோதலின் போது மற்றொரு பாலஸ்தீனிய இளைஞரான குசே அல்-தமிமி உயிரிழந்ததாக அமைச்சகம் பின்னர் தெரிவித்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *