இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 40 பேர் காயம்!

<!–

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 40 பேர் காயம்! – Athavan News

கொழும்பு பிரதான வீதியின் உத்துவான்கந்த பிரதேசத்தில் மாவனெல்லையில் இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *