முச்சக்கரவண்டி பயணத்தின் போது சாரதிக்கு நெஞ்சுவலி – நடந்த துயரச் சம்பவம்

தனது முச்சக்கர வண்டியில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பயணித்த நபர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

நிக்போட்டா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

பெரகல வெல்லவாய பிரதான வீதியின் பிபிலஹேன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெஞ்சு வலிப்பதாக கணவர் திடீரென கூறியதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

அப்போது முச்சக்கரவண்டியில் இருந்து திடீரென தவறி விழுந்து உயிரிழந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பின்னர், சாரதியின்றி முன்னோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மரத்தில் மோதி நின்றது.

முச்சக்கரவண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாரதி பின்னர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *