பாடசாலை இடைவிலகல் சடுதியாக வடக்கில் அதிகரிப்பு!

கொரோனா பெருந்­தொற்­றுக் காலத்­தின் பின்­னர் வடக்கு மாகா­ணத்­தில் பாட­சா­லை­க­ளி­லி­ருந்து இடை­வி­ல­கும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

2020ஆம் ஆண்டு 485ஆக­வும், 2021ஆம் ஆண்டு ஆயி­ரத்து 105 ஆக­வும், இந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் வரை­யில் 519 ஆக­வும் இடை­வி­ல­கிய மாண­வர்­கள் எண்­ணிக்கை உள்­ள­தாக வடக்கு மாகாணக் கல்­வித் திணைக்­க­ளம் வழங்­கிய தக­வ­லில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

க­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக வடக்கு மாகாண கல்­வித் திணைக்­க­ளத்­தி­டம் கோரிய தக­வல்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அதி­லேயே இந்த விட­யங்­கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.
2020ஆம் ஆண்டு வடக்கு மாகா­ணத்­தில் ஆகக்­கூ­டு­த­லாக மடுக்­கல்வி வல­யத்­தில் 94பேர் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­ல­கி­யுள்­ள­னர்.

மன்­னார் கல்வி வல­யத்­தில் 72பேரும், கிளி­நொச்சி தெற்கு கல்வி வல­யத்­தில் 52பேரும், கிளி­நொச்சி வடக்கு கல்வி வல­யத்­தில் 51 பேரும், முல்­லைத்­தீவு கல்வி வல­யத்­தில் 48 பேரும் இடை­வி­ல­கி­யுள்­ள­னர்.

அதி­க­ள­வில் ஆண்­களே இடை­வி­ல­கி­யுள்­ள­து­டன் 10ஆம் மற்­றும் 11ஆம் தரங்­க­ளைச் சேர்ந்­த­வர்­களே இதில் அதி­க­மா­க­வும் உள்­ள­னர்.

2021ஆம் ஆண்டு வடக்கு மாகா­ணத்­தில் ஆகக் கூடு­த­லாக கிளி­நொச்சி தெற்கு கல்வி வல­யத்­தில் 181 பேர் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­ல­கி­யுள்­ள­னர். வலி­கா­மம் கல்வி வல­யத்­தி­லி­ருந்து 148 பேரும், மன்­னார் கல்வி வல­யத்­தி­லி­ருந்து 135 பேரும், கிளி­நொச்சி வடக்கு கல்வி வல­யத்­தி­லி­ருந்து 119பேரும் இடை­வி­ல­கி­யுள்­ள­னர்.

இந்த ஆண்­டின் ஏப்­ரல் மாதம் வரை­யில் வடக்கு மாகா­ணத்­தில் ஆகக் கூடு­த­லாக வலி­கா­மம் கல்வி வல­யத்­தில் 123 பேர் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­ல­கி­யுள்­ள­னர். வவு­னியா வடக்கு கல்வி வல­யத்­தில் 110பேரும், மன்­னார் கல்வி வல­யத்­தில் 101பேரும் இடை­வி­ல­கி­யுள்­ள­னர்.

கொரோ­னாப் பெருந்­தொற்­றின் பின்­ன­ரான அதி­க­ரித்த இடை­வி­ல­கல்­க­ளுக்­கான கார­ணம் தொடர்­பில் வடக்கு மாகாண கல்­விப் பணிப்­பா­ளர் செ.உத­ய­கு­மா­ரி­டம் கேட்­ட­போது, வறு­மை­யும் இதற்­குப் பிர­தான கார­ணம். அதனை விட கொரோனா காலத்­தில் பாட­சா­லை­க­ளு­டன் தொடர்­பில்­லாது நீண்ட காலம் இருந்­த­மை­யால் மாண­வர்­கள் தொழில்­களை நாடிச் சென்ற சம்­ப­வங்­க­ளும் இடம்­பெற்­றுள்­ளன. சில பெற்­றோர் தமது பெண் பிள்­ளை­க­ளுக்கு திரு­ம­ண­மும் செய்து வைத்­துள்­ள­னர் என்று குறிப்­பிட்­டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *