கடந்த சில மாதங்களுக்கு முன்பு எப்படி கோட்டபாய அரசின் அமைச்சர்கள் ஓடி ஒளிந்தார்களோ அவ்வாறான நிலை ரணில் அரசாங்கத்துக்கும் ஏற்படலாம், பயங்கரவாத சட்டம், ஊரடங்கு சட்டம் இது எல்லாம் மக்கள் பசிக்கு அடங்காது என அரகல மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த குறித்த இயக்கத்தின் உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடை சட்டத்தை வைத்து நாட்டு மக்களையும் நாட்டையும் ரணில் அரசு பயமுறுத்தி வருகிறது.
இதனூடாகத்தான் அனைத்து மாணவ ஒன்றியத்தின் மாணவர் தலைவரையும், தேரரையும் கைது செய்துள்ளது.
ஜாதி, பேதம், மதம், மொழி கடந்து எமது பசிக்கு போராடினோம் அதை போல் கைது செய்ய பட்டவர்களை விடுவிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும். இது அரசியல் இல்லை அரகல
மக்கள் புரட்சி, மக்கள் வெள்ளம் வந்தால் எந்த தடுப்பு அனையும் சரி வராது என்பது மக்கள் வயிற்றில் அடித்தவர்களுக்கு நன்கு தெரியும் என்ன நடந்தது என்று.
எனவே 19,20,22,21, சட்டங்களை உங்கள் தேவைக்கு ஏற்ப எற்படுத்தி கொள்ளாமல் மக்கள் தேவைகளுக்கு ஏற்ப செயற்படுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை விடுகின்றோம்.
பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய வேண்டும் கைது செய்யபட்டவர்களை உடன் விடுவிக்க வேண்டும். பயங்கரவாதச் சட்டம் உடன் நீக்க வேண்டும். அதை விடுத்து மக்கள் கோபத்துக்கும் சாபத்திற்கும் வழி செய்ய வேண்டாம் என கூறி கொள்ள விரும்புகிறோம் என்று அரகல மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்