
எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தொழில்முறை பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் வாராந்த ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
முதல் கட்டமாக, மேல் மாகாணத்தில் (WP) தொழில்முறை முச்சக்கர வண்டிகளின் பதிவு நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் வாரத்திற்கு 10 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும். பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளின் பதிவு நவம்பர் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்படும்.
அதன் பின்னர் ஏனைய மாகாணங்களில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கையில் 1.08 மில்லியன் முச்சக்கர வண்டிகள் உள்ளன, அவற்றில் 400,000 பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகள் என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 300,000 முச்சக்கர வண்டிகள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நவம்பர் 13ஆம் திகதிக்குள் நாடளாவிய ரீதியில் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்ய முடியாத பட்சத்தில், பொலிஸில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை ஆரம்ப கட்டமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பிற செய்திகள்