கட்டுடையில் ஹெரோய்னுடன் இளைஞர் கைது

மானிப்­பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கட்­டுடை பகு­தி­யில் 20 மில்­லி­கி­ராம் உயிர்­கொல்லி ஹெரோய்ன் போதைப்­பொ­ரு­ளு­டன் இளை­ஞர் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார் என மானிப்­பாய் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தெரி­வித்­தார்.

தெல்­லிப்­பழை பகு­தி­யைச் சேர்ந்த 28 வய­து­டைய இளை­ ஞரே இவ்­வாறு நேற்­று­ கைது­செய்­யப்­பட்­டார்.

மானிப்­பாய் – கட்­டு­டைப் பகு­தி­யில் விசேட சோதனை நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸார் சந்­தே­கத்­துக்­கி­ட­மாக நட­மா­டிய இளை­ஞர்­களை சோத­னை­யிட முயன்றவேளை இளை­ஞர் ஒரு­வர் தப்­பி­யோ­டி­யுள்­ளார்.

அந்த இளை­ஞரை மடக்­கிப்பிடித்து சோத­னை­யிட்ட­ போது அவரிடமிருந்து 20 மில்­லி­ கி­ராம் ஹெரோய்ன் போதைப்­பொ­ருள் மீட்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

ஹெரோய்ன் போதைப்­பொ­ருளை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக தெல்­லிப்­ப­ழை­யி­லி­ருந்து சைக்­கி­ளில் வந்­தார் என்று சந்­தே­க­ந­பர் விசா­ர­ணை­யில் தெரி­வித்­துள்­ளார்.

சந்­தே­க­ந­பரை மேல­திக விசா­ர­ணை­க­ளின் பின் மல்­லா­கம் நீதி­மன்­றில் முற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *