
பிரிட்டன் புதிய பிரதமராக ரிஷி சுனக் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரிட்டன் பிரதமராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை கடந்த வியாழக்கிழமை துறந்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன.
இந்த நிலையில், ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் 3-ஆம் சார்லஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
மன்னரின் அழைப்பை ஏற்று பக்கிங்ஹாம் அரண்மனைக்கு நேற்று சென்ற ரிஷி சுனக் 3ஆம் சார்லஸை சந்தித்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்மூலம் இங்கிலாந்து வரலாற்றில் முதல்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவியில் அமர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.