பெற்றோலுடன் கலக்கப்படும் மாத்திரைகள் – இலங்கையில் அதிர்ச்சி

பெற்றோலின் ஒக்டேன் பெறுமதியை அதிகரிக்கவும் எரிபொருளில் கந்தகத்தின் அளவைக் குறைக்கவும் ஒரு மாத்திரையை எரிபொருளுடன் கலக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எந்தவொரு நிறுவனத்திற்கும் ஆலோசனையோ அனுமதியோ வழங்கவில்லை என அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை ‘ஈகோ டேப்லெட்’ எனப்படும் எரிபொருளில் பயன்படுத்தப்படுகிறது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் சந்தையில் டீசல் மற்றும் பெற்றோல் என்பவற்றின் பெறுமதி குறைந்த ஒக்டேன் கொண்டுள்ளதாக, தரநிலை முறையின்படி, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப்படாமல், நிறுவனம் செய்த விளம்பரங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவிக்கின்றது.

மேலும் இதுபோன்ற மோசடி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *