
தலவாக்கலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – பூண்டு லோயா பிரதான வீதியில் இன்று மாலை 5 மணிக்கு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியுடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
தலவாக்கலை நகர சபை விளையாட்டு மைதானத்திற்கு எதிரே இருக்கும் பிரதான வீதியில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் பணிகளை தலவாக்கலை பொலிஸார், நகர சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் வாகன சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்தி தமது போக்குவரத்தை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்