நாட்டில் பல பாடசாலை மற்றும் பல்கலைகழக மாணவர்களிடையே அதிகரித்து வரும் பால்வினை நோய்!

நாட்டில் பல பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பாலுறவு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் வெளிப்படுத்தியுள்ளது.

பால்வினை நோய்களால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

இளைஞர்கள் ஸ்பாக்களுக்குச் செல்வது ஒரு காரணம் என்றும், ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவதும், பல இளம் பெண்களும் பாதிக்கப்படுவதும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *