வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள காணி உறுதிப் பத்திரம் உள்ள தனியார் காணியில் நெற் செய்கை மேற்கொள்வதற்கு கோவில்குளம் கமநல சேவைகள் நிலையம் இடையூறை ஏற்படுத்துவதாக காணி உரிமையாளரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க அனைவரும் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கி வரும் நிலையில் எமது சொந்த உறுதிக் காணி இரண்டு ஏக்கரில் நெற் செய்கை மேற்கொண்டு வருகின்றேன்.
இந்நிலையில், என்னிடம் காணி உறுதிப் பத்திரங்கள் உள்ள எனது அப்பாவின் பரபம்பரைக் காணியில் பயிற்செய்கை செய்வதற்கு மாவட்ட கமநல சேவைகள் நிலையம் இடையூறை ஏற்படுத்துவதுடன், நான் பயிற் செய்கை மேற்கொண்டால் உரம் உள்ளிட்ட பொருட்களை வழங்க முடியாது எனவும் கூறுகின்றனர். எனது காணிக்கு அருகில் உள்ள பிறிதொரு நபர் எனது காணியில் உரிமை கோருவதாக கூறுகின்றனர்.
ஆனால், அதனை கமநல சேவைகள் திணைக்களம் தீர விசாரிக்காத நிலையில், பிரதேச செயலகம் மூலமும், பரம்பரையான தனியார் உறுதிப் பத்திரம் மூலமும் எனது காணி என்பது உறுதிப்பட்டுள்ள போதும் காலம் காலமாக பயிற் செய்கையில் ஈடுபட்டு வரும் எனக்கு கமநல சேவைகள் திணைக்களம் இடையூறை ஏற்படுத்துவதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.


பிற செய்திகள்