பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் திடீர் தீ விபத்து!

முச்சக்கர வண்டி ஒன்று நுவரெலியா கண்டி வீதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் பயணித்துக் கொன்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இவ்விபத்தானது நேற்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தின் போது முச்சக்கரவண்டியில் சாரதி மற்றும் சாரதியின் மனைவி, பிள்ளை ஒருவரும் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவ்விபத்தானது நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா பிரதான மத்திய சந்தைக்கு அருகில் தீ பற்றி உள்ளது.

பலரின் போராட்டத்திற்கு பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே வாகனம் தீப்பிடித்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிற போதிலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *