பெரமுனவில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா மற்றும் பசில்!

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பிற்காக பயன்படுத்தப்படும் பின்புற டிஜிட்டல் காட்சிப்படுத்தலில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் இரண்டு வருடங்களாக மேலாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோரின் புகைப்படங்களுடன், கட்சியின் சின்னமான தாமரை மொட்டும் மாறி மாறி வரும் வகையில் பின்புற காட்சிப்படுத்தல் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும், அதில் தற்போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தாமரை மொட்டு சின்னம் மாத்திரமே மாறி மாறி வரும் வகையில் அந்த டிஜிட்டல் காட்சிப்படுத்தல் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்சி அலுவலகத்தின் ஊடக சந்திப்பு நடத்தப்படும் இடத்தில் பின்புற டிஜிட்டல் காட்சிப்படுத்தலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பஷில் ராஜபக்ஸ ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *