சீனாவில் நுகர்வோர் பணவீக்கம் உயர்வு

சீனாவின் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பரில் அதியுச்சமான உயர்வை எட்டியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உணவு மற்றும் எரிசக்தி செலவினங்களில் உலகளாவிய தாக்கத்தில் இருந்து சீனாவில் உள்ள நுகர்வோர் பெருமளவில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் சில்லறை பணவீக்கத்திற்கான முக்கிய அளவீடான நாட்டின் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த மாதம் 2.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 2.5சதவீதமாக இருந்தது.

ஏப்ரல் 2020 இற்கு பிறகு, கொரோனாவின் முதல் அலை முடக்கல்களின் பின்னர் ஏற்பட்டுள்ள அதியுச்சமான பதிவாக இது உள்ளது.

அத்துடன், சீனாவில் 40 செல்சியஸுக்கு மேலாக பல வாரங்களாக வெப்பநிலை தொடர்கின்றமையால் ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

‘சீனா அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய காய்கறிகளின் விலைகள் 6.5 சதவீதம் உயர்ந்துள்ளன’ என்று மூத்த புள்ளியியல் நிபுணர் டோங் லிஜுவான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பன்றி இறைச்சியின் விலை, 36சதவீதம் உயர்ந்துள்ளது. சில பன்றி இறைச்சி விற்பனையாளர்கள் அவற்றை தயங்குவதும் மேலதிக கேள்விகளை ஏற்படுத்திவருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் பணவீக்கக் கவலைகளைத் தூண்டியதால், சீன அதிகாரிகள் சமீபத்திய வாரங்களில் பன்றி இறைச்சி இருப்புக்கள் தொடர்பில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், நாட்டின் கைத்தொழில்துறையின் பணவீக்கம் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது,

இது ஒரு வருடத்திற்கும் மேலான மிகக் குறைவான மூலப்பொருள் விலைகளின் பின்னணியில், ஏற்பட்ட பிரதிபலிப்பைக் காண்பிக்கின்றது.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 2.3சதவீத உயர்விலிருந்து குறைந்துள்ளது.

அத்துடன், செப்டெம்பரில், கச்சா எண்ணெய் மற்றும் பிற மொத்த பொருட்களின் சர்வதேச விலைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

ப்ளும்பெர்க்கின் ஆய்வாளர்களின் கருத்துக்களின் பிரகாரம், நுகர்வோர் விலைகள் 2.9சதவீதமும், உற்பத்தியாளர் விலைகள் ஒரு சதவீதமும் உயரும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *