
யாழில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் இன்று வரை யாழில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்கதையாக மாறியுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் யாழ் வேலணை அம்பிகை நகர் பகுதியில் 750 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறை தெரிவித்துள்ளது.
பகல் சுற்றக் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வேலணை ப் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பிரபல போதைப்பொருள் வியாபாரி என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபரை இன்றையதினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்