யாழ் பல்கலையில் மெய்கண்டார் விழா!

மெய்கண்டாரின் குருபூசையை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறை, உயர் பட்டப்படிப்புகள் பீட சைவசித்தாந்த முதுமாணிக் கற்கை அணி என்பன இணைந்து நடத்தும் மெய்கண்டார் விழா இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சைவசிந்தாந்தத்துறைத் தலைவர் கலாநிதி சந்திரசேகரம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமி, முன்னாள் கலைப்பீடாதிபதி தகைசார் பேராசிரியர் கோபாலகிருஷ்ண ஐயர் இலங்கை சர்வதேச இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சைவசித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக்குருக்கள் ஆகியோரின் ஆசியுரை யுடன், இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவும், கௌரவ விருந்தினர்களாக உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரி யர் கண்ணதாசன், இந்துக் கற்கைகள் பீடாதிபதி கலாநிதி சுகந்தினி சிறிமுரளிதரனும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் சைவசித்தாந்த மரபு குறித்த காணொளி பட்டிமன்றம், வில்லிசை,மற்றும் கலாநிதி ரதிதரனின் நெறியாள்கையில் மெய்கண்டார் நாடகம் என்பனவும் இடம் பெறவுள்ளதாக, நிகழ்வின் ஏற் பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *