யால சரணாலய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

<!–

யால சரணாலய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை – Athavan News

யால சரணாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள் ஏற்கனவே பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர்கள் யால சரணாலயத்தில் மிருகங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் அண்மைய தினத்தில் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *