யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிவடக்கு பிரதேச சபை தெல்லிப்பழை உப அலுவலகம் மற்றும் தெல்லிப்பழை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் காலை 9 மணியளவில் ஆரம்பித்த பேரணி தெல்லிப்பழைச் சந்தியில் நிறைவடைந்தது.
போதைப்பொருள் பாவனையை ஒழித்தல், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல், பாலின சமத்துவத்தை பேணல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்
- மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு – புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை!
- அவுஸ்திரேலிய கடற்படையின் கப்பல்கள் கொழும்பில்!
- ஈஸ்டர் தாக்குதலுக்கு இணையான பயங்கரவாத தாக்குதலை இந்தியாவில் நடத்த திட்டம்? புலனாய்வு அமைப்பு சந்தேகம்
- யாழில் இரு இளைஞர்கள் மரணம் – வெளியான உடற்கூற்று பரிசோதனை
- பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் திடீர் தீ விபத்து!
- குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு
- பரீட்சையில் கொப்பி அடிப்பதை தவிர்க்க மாணவர்களின் விசித்திர தொப்பிகள்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka