
மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரச நிர்வாகச் சுற்றறிக்கையை அப்பட்டமாக மீறும் வகையில் அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரிகளுக்கு கேகாலையில் ஒரு நாள் பயிற்சி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் (கட்டுப்பாட்டு) இந்த பயிற்சி குறித்து அந்த திணைக்களத்தில் உள்ள அனைவருக்கும் கையால் எழுதப்பட்ட குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு நவம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கேகாலை சனச வளாகத்தில் ஒரு நாள் வதிவிடப் பயிற்சியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பங்கேற்பது கட்டாயம் எனவும் மேலதிக பணிப்பாளர் நாயகம் அனுப்பியுள்ள குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 04/2022 மூலம் பிரதான அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் தொலைதூரக் கடமைகளுக்குச் செல்வதைக் குறைக்க வேண்டும் என்றும், கொழும்புக்கு வெளியில் உள்ள களப்பணிகளை மாவட்டச் செயலாளர் / பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட / மாகாண அதிகாரிகள் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. முடிந்தவரை கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை முடிந்தவரை ஜூம் மற்றும் டீம்ஸ் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 7, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் வருகையை கட்டாயமாக்கி மேலதிக பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள குறிப்பின் பிரகாரம், திணைக்களத்தின் 200 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் இந்தப் பயிற்சிக்காக செல்ல உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது திணைக்களம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதோடு, எரிபொருள் பெறப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கட்டணம் செலுத்தாத நிலையும் காணப்படுகிறது. மேலும் எரிபொருள் , மின் கட்டணம், தண்ணீர் கட்டணம், இணைய வசதிகளுக்கான கட்டணம் போன்றயும் செலுத்தபடவில்லை .இந்நிலையில் சுற்றறிக்கையை மீறி, இதுபோன்ற பயிற்சிகளை நடத்துவது நியாயமற்றது என என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்