இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக, சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் பதவியில் இருந்து இலங்கையில் பிறந்த ரணில் ஜெயவர்த்தன விலகினார்.
தமது பதவி விலகல் தொடர்பில் அவர் சுனக்கிற்கு கடிதம் மூலம் அறிவித்தார்.
“அரசாங்கத்தில் உங்களுடன் ஒரு புதிய குழு சேர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், எனவே ஒதுங்கி நிற்பதற்காக நான் எழுதுகிறேன்“ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சுனக்கின் நியமனம் குறித்து ஜெயவர்தன தனது “வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஜெயவர்தன சுற்றாடல் செயலாளராக 2022 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் நேற்று பதவி விலகும் வரை பணியாற்றினார்.
தமது பதவி விலகல் கடிதத்தில், முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் தன்னை அந்த பதவிக்கு தேர்ந்தெடுத்ததற்காக “மிகவும் நன்றியுள்ளவனாக” இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயவர்த்தன இதற்கு முன்னர் 2020 மே முதல் 2022 செப்டம்பர் வரை சர்வதேச வர்த்தக அமைச்சராக பணியாற்றினார்.
அவர் 2015 இல் வட கிழக்கு ஹாம்ப்ஷயரின் கொன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.