
பெண் ஆசிரியையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆண் ஆசிரியர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவிடம் ,கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“அவர் அந்த ஆண் ஆசிரியருடன் கிளப் ஒன்றிற்குச் சென்றதாகவும், அன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாததால், ஆண் ஆசிரியருடன் விடுதிக்கு சென்றதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அப்போது தான் குடிபோதையில் இருந்ததால் தனக்கு நடந்த எதுவும் தெரியவில்லை என்றும், ஆண் ஆசிரியர் தனது அனுமதியின்றி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்தவர் நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை மருத்துவ பரிசோதனை உறுதிப்படுத்தியதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
பிற செய்திகள்