
யால தேசிய பூங்காவில் திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சில வாகனங்கள் கண் மூடித்தனமாக சாகசங்களில் ஈடுபடுவதையும் வனவிலங்குகளை துன்புறுத்துவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இதனை அடுத்து வாகனங்களிற்கு வழிகாட்டிகளாக செயற்பட்டவர்களும் பூங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் மற்றும் வாகனங்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அதேவேளை 3 ஆண்டுகளுக்கு இலங்கையில் எந்த தேசிய பூங்காவிற்கும் நுழைய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.