
பிரத்தியோக வகுப்புகளை நிறைவு செய்த பின்னர் ,மாலை 5 மணிக்கு யாழ்பாணத்திலிருந்து,முல்லைத்தீவு நோக்கி பயணிக்கும் அரச பேருந்தில் மாணவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வகுப்புகளை நிறைவு செய்த பின்னர் கொடிகாமம்,கச்சாய் உள்ளிட்ட தென்ராட்சி மற்றும் அதற்கு அப்பால் உள்ள இடங்களுக்கு மாணவர்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.வகுப்புகள் நிறைவடையும் நேரத்துக்கு முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று யாழ்பாணத்திருந்து மாலை 5 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும்.
குறித்த பேருந்தில் பெரும்பாலான நாட்களில் மாணவர்கள் ஏற்றப்படுவதில்லை என்றும்,பேருந்து நடத்துனர்கள் ஆண் பெண் வேறுபாடின்றி தகாதவார்த்தைகளால் திட்டுவதாகவும்,உரிய இடத்தில இறக்கி விடுவதில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
.இதனால் கடந்த வாரம் முழுவதும் மாணவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு சாலை முகாமையாளருடன் இரண்டு நாட்கள் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்த போதும் ,அவர் வெளிமாவட்டம் ஒன்றுக்கு பயிற்சிக்காக சென்றுள்ளதாக ,தெரிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்