
சட்ட விரோதமாக வாள், கத்திகளை வைத்திருந்ததாக கூறப்படும் 6 சந்தேக நபர்களை கொழும்பு விஷேட அதிரடி படையினர் கைது செய்து வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கொழும்பு தலைமையக முகாமில் கடமையாற்றும் படையினரே இவ்வாறு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
கடமையில் ஈடுபட்டுகொண்டிருந்த அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , விரைந்து செயற்பட்டதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ததாக அதிரடிப்படை அதிகாரி தெரிவித்தார் .
அதிரடிப்படை கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தர மேற்பார்வையில்,நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 20, 21, 26, 27 வயதுடைய 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வெல்லலாம்பிடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்
பிற செய்திகள்