ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு – அரசாங்கம்!

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பாதுகாப்பதற்காக மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எதிர்காலத்தில் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும்போதே, அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதை நிறுத்தாமல் பராமரிக்கும் வகையில், பல மனித உரிமைகள் அம்சங்களில் முன்னேற்றம் அடைய தேவையான பணிகளை இலங்கை அரசு செய்து வருகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *