
இறக்குவானை முதல் தெனியாய வரையிலான பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கின்றார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்
இறக்குவானை முதல் சூரியகந்தை ஊடான தெனியாய வீதியே இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த வீதி மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெறும் உதவி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளதாகவும் பந்துல குணவர்த்தன குறிப்பிடுகின்றார்.
பிற செய்திகள்