நாட்டை மீட்பதற்கு கடன் வாங்கி பலன் இல்லை,டொலரை எவ்வாறு உழைப்பது என்று நாம் சிந்திக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மருந்தக உரிமையாளர்கள் சங்கம்,மருந்தக உதவியாளர் சங்கம் உள்ளிட்டோருடன் ,எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை மீண்டும் கொண்டு வர வேண்டும்.அவ்வாறு இல்லாமல் சீனா,இந்தியா,அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து கடன் பெறுவது முன்னேற்றம் அல்ல.
இது தவிர திருடிய,கொள்ளையடித்த,அரச வளங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.இந்த பணமும் சொத்துக்களும் 220 இலட்சம் பொதுமக்களின் சொத்து.
ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த வழியைப் பின்பற்றுமா என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயம். என்றாலும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ்,திருடப்பட்ட பணம் அனைத்தும் தெளிவான, வெளிப்படத்தன்மையுடனும் பொறுப்புடனும் தொடர்புடைய அனைத்து வளங்களும் மீட்கப்படும்.
நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க எதிர்க்கட்சியில் இருந்தும் பெரிய வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் இதுவரை 165 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள்,மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
பிற செய்திகள்