திங்கட்கிழமை அடுத்த கப்பல் நாட்டை வந்தடையும் – காஞ்சன விஜேசேகர!

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்துக்கு இந்த பருவத்துக்குத் தேவையான 38 நிலக்கரி ஏற்றுமதிகளில் முதலாவது ஏற்றுமதியை சுமந்து வந்த கப்பல் நேற்று (25) இரவு கொழும்பை வந்தடைந்தடைந்தாகத் தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இரண்டாவது நிலக்கரி கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை (31) நாட்டை வந்தடையும் என்று தெரிவித்தார்.

குறித்த மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரிக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலக்கரி கம்பனி அதிகாரிகளுடன், இன்று (26) காலை முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் இன்று (26) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *