ரி-20 உலகக்கிண்ணம்: பங்களாதேஷ் அணிக்கு 206 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்கா!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின், சுப்பர்-12 சுற்றின் குழு-2இல் நடைபெறும் தொடரின் 17ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி, பங்களாதேஷ் அணிக்கு 206 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரீலே ரொஸ்சவ் 109 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சகில் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட் மற்றும் அபீப் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தற்போது 206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *