இரட்டை குடியுரிமை தொடர்பில் அறிந்துக்கொள்ள முயற்சிக்கும் சபாநாயகர்!

இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அறிந்துக்கொள்வதற்காக, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஒன்றை கோரியுள்ளார்.

அதாவது, 21 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இரட்டை பிரஜை உரிமை கொண்டவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் குறித்த கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரஜா உரிமைகள் தொடர்பில் விசேட குழுவொன்று ஆய்வொன்றை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் பெரும்பான்மையானோர் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது இரட்டை பிரஜாவுரிமை காணப்படுமாயின் அதனை மறைத்து செயற்படவே முயற்சித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு மறைத்து செயற்படும் பட்சத்தில் அதனை மீள பரிசீலனைக்கு உட்படுத்த முறையொன்று திணைக்கள செயற்பாட்டில் இல்லை என குடிவரவு குடியகல்வு திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *