மதுவில் மயக்கத்தால் வயதான தம்பதிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மதுவுக்கு அடிமையான வயதான தம்பதிகள் , மது போதையில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் பதுளை வைக்கும்பர பெருந்தோட்டத்தில், 26 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடொன்றில் மகள் தொழில் செய்து வருகின்றார்.

இவர் பெற்றோருக்கு அனுப்பும் பணத்தில் இவ்விருவரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இந்நிலையில் கூடுதலாக மது அருந்தியதால் மயக்கமுற்று தம்பதிகள் கீழே விழுந்துள்ளனர்.

இதனையடுத்து அயலவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் , இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *