
டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை குறித்து கலந்துரையாடலொன்று சிவனொளிபாதமலையின் பிரதம குருவும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின் பீடாதிபதியும் பெல்மதுளை ரஜமஹா விகாரையின் தலைவருமான பெங்கமுவ தம்மதின நாஹிமி தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது சிவனொளிபாதமலை பருவ காலத்தில் வழங்கப்படவுள்ள சேவைகள் மற்றும் பெரஹெர ஊர்வலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக சினொளிபாதமலை பருவ காலத்தில் இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை,வீதி அபிவிருத்தி அதிகார சபை,சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு, மாகாண சுகாதார அமைச்சு, இலங்கை போக்குவரத்துச் சபை, உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட ஏனைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது மத குருமார்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இரத்தினபுரி மாவட்ட செயலார் மாலணி லொக்குபோத்தாகம, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்